Thursday, March 5, 2026

ஏகமே அத்விதீயம்

தானும் நீயும்
வேறெனப் புலப்படா
சிந்தை தனதென்பதால்
பிரித்தறிந்து பேதம்
சொல்லிட உனக்கென்ற
அக்கறை  எனதில்லை......

அக்கரையில் நாமில்லை
இக்கரை நாளும்
நமதானதால் அக்கறையும்
அன்பும் காட்டிடும்
அவசியங்கள் எல்லாம்
உலகிற்கோர் வேஷம்.....

எனதென்ற இயல்பை
கடந்தே பின்னே நீ என
பேதம் கடந்து நான்
நாமாகும் யோகம் 
நாளெல்லாம்
நமக்குச் சொந்தம்.....
பேதம் உருவாக்கும்
படைப்பில் ஒன்று நானாக
வாசியும் நீ தான்
வாழ்வும் நீ தான்
ஒளியற்ற இருளில்
ஒடுங்கிடும் உயிரின்
தன்மை எல்லாம்...

இரண்டல்ல வேறல்ல
ஒன்றேயான பிரம்மமே
(ஏகமே வாத்விதீயம்” )
தன்னை தனக்குள்
ஒன்றி ஒன்றாய்க்
கலந்த உயிர்க் காதலின்
ஒருமித்த உன்னதம்....

#மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்

No comments:

Post a Comment