ஆயிராமாயிரம் கணங்கள்
நேருக்கு நேர் என்றாகினும்
வரு மேகங்கள் என உந்தன்
இடைவிடாத பொய்க் கோபங்கள்....
பொய்களை மாய்க்கப் பிறக்கும்
உன் அருகிருப்போ புதுக்கவியென
இன் தமிழென வெளிவரும்
நேசத்தின் விதைகளே!!!..
வாக்கியங்கள் பல மாற்றி
பின்னே அதன் வரிசையும் மாற்றி
சற்றேனும் தளர்வுகள் என
தடம் மாற்றும் நிகழ் கால பந்தங்கள்...
விநயம் விகல்பம் என்றே வினோத
விகாரங்கள் என இருவரின் இடையே
வரும் மாயங்கள் தவிர்க்கச் செய்தாய்
உள் தமிழ் உன்னால் மெல்ல எழும்...
காலம் கணிதனாய் சொல்லும்
புதிய விடையெல்லாம் புதுமையென
நாளும் வியக்கிறேன் இதனின்
பழமை மறந்த நிலையாய்☺️
எனக்குள்ளே நான்.....
#மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்
No comments:
Post a Comment