என்னிடம் என்றோ
விலகி வெகுதூர இருப்பில்
உன் நினைவுப் பயணங்கள்............
முகில்கள் அசைந்து
வருடும் காற்றைப் போல
இனிமை அது உன் காதல் ...............
நீள் துயில் கொண்ட
என் இதயம் உன் நினைவில்
நீங்காத தன்மை ஓர் நிம்மதி................
கடமையதில் தொலைந்து
போனதோ எந்தன் மீதான் உன்
மையல் அது வெகுவாய்............................
இன்னிசையும் முத்தமிழும்
என்னுயிராய் எக்காலம் தொட்டு
முக்காலமும் ஆனவள்
அவள் பெயர் #மாதங்கி.
சரண் பழகிய நெஞ்சத்தின்
விகல்பங்கள் துடைத்தெறிந்து
தன்னுள் என்னை தொலைத்திட
அருள் புரிவாளோ அந்த அன்னை......
#மாதங்கியான்
No comments:
Post a Comment