Wednesday, February 18, 2026

அன்பியலின் பெருந்துணை

சிறு துயரங்கள் ஆகிப்போன என்                 சுமையை சுமக்கும் உன் பணிதான் அன்பியலே எத்துணை பெரிது.....

மலர்ச்செடிகள் சூழ் வனத்தின் நடுவே
மகரந்த நறுமணம் போல
உன் மனம் நினைத்து நெகிழ்வேன்.....
வலியில்லாத வாழ்க்கை தரத்துணிந்த
என் சித்தம்.. சித்தமதின் எண்ணங்களை
பெருமிதமாய் முடித்திருக்க காலம் உதவட்டும்.....

பெரிதான பொருள் சேர்ப்பில்
 வெறும் புகழில் மனமில்லை. 
நிகழ்கால ஊறுகள் பல தன்மைக்கு வருங்காலத்தில் இடமில்லை......

இடையிடையே சிறு இடைவெளிகள் ஒன்றே உன்புகழ் தமை 
எமக்கு உணர்த்தும். என்னுள்ளே 
மெல்ல மெல்லத் தமிழ் மலர்த்தும்..

இனியொரு தருணத்திலும்
 உன் இயல்பினை முத்தமிழாய் விளிப்பேன்.. 
முகுந்தன் கண்ட பெருந்துணை போல...

இல்லம் இனிக்க தன்னை பணிக்கும்
கனிவான உள்ளம் கொண்டவளே....

 வாக்கில் கலைமகள் நின்றாடும் 
கவி நிலவே...
வாழ்க நாளும் வளர்கவே....

#மாதங்கியான் #மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment