மீண்டும் ஒரு மேகதூதம்
உனக்காக நான் பாட வேண்டும்...
மேகங்களை அனுப்பி தூது சொல்லும் சாத்தியம் மீண்டும் கை கூட வேண்டும்
இடையில் தடைகள் இல்லாமல்
மன அஞ்சல் உன்னிடம் சேர வேண்டும்
காலம் கருணை கொண்டதால்
கவிதை உன் முகவரி அறிந்தேன் 🙏
அத்திங்களில் பிழையின்றி
என்னை உன்னிடம் அறிவித்தேன் 🌿🌿
தசம் இரண்டு ஆண்டுகள் தாண்டி
தடாதகை உணர்த்திய அதிசயம்
விதி வழியே இயல்பாய் செல்ல
என்னை இன்னும் பணிக்குமோ 🪷🪷🪷
துயர் துடைக்க உடன் நின்று உதவிடும்
தோழமையாய் இருக்க வரம் கேட்டேன்
திருவருளால் காட்டியவள் யாரோ
உன் புரிதலுக்கு பெரிதும் உவப்பாள்
காத்திருக்கிறேன் அதிசயங்களை காண
#kavithaitamil #kavithai #tamilkavithai #மாதங்கியின்_மைந்தன் #மாதங்கியான்
No comments:
Post a Comment