Sunday, February 15, 2026

இதயத்தின்‌ உதயம்

"கவலையில் கிடப்பவனைக் கலைத்து, கவிஞன் ஆக்கினாய்!

ஆயிரம் குழப்பங்கள் என்னிடமிருந்து தொலைந்து போக,


 இயல்பில் மனம் காணாத அமைதி உன்னால் அதிசயமாய் என்னுள் பூக்கும் 'அமிர்த காலம்' இது.



நீ தொட்டு வரைந்த அழகிய சிறு காவியம், ஆயுளுக்கும் இனிய நினைவாய் எந்நாளும் தொடரட்டும்.

மேன்மையான இயல்பில் என்னை நிறுத்தி வைக்க, 



காலம் முழுமைக்கும் கரம் பிடித்து அழைத்துச் செல்லும் என் இனிய கவிநிலவே!

ஆழக்கடலில் இருந்து கிளம்பி எழும் அழகிய உதயத்தைப் போல், 


என் இதயத்தில் நீ வெளிப்பட்டுத் தோன்றிட... 



இனிய கவிதைகளை நானும் என்னுள்ளிருந்து படைத்திடுவேன்!"


#மாதங்கியான் #மாதங்கியின்_மைந்தன்

No comments:

Post a Comment