Tuesday, February 17, 2026

இதயத்தின் சாசனம்

உலகெங்கும் தேடி அலைந்தேன் பின்பு உன்னிடம் அது ஒளிந்துள்ளதை நான் உணர்ந்தேன். 


பார்வை குற்றம் என்று எண்ணாதே பாராத குற்றம் என்று கூட சொல் 🪷


உன் நெஞ்சகமே என் மஞ்சமான நிமிடங்கள்..
மௌனத்தின் பரிவர்த்தனைகள் 
புன்னகை ததும்பும் பார்வைகள்....



பாவக சுபத்துவத்தை ஆயுளுக்கும் வளர்த்தெடுக்கும் 
அவள் இயல்பு கவியின்
உவப்பாய்...


சந்தை இசைதனில் சிந்திக்க மறந்திட்ட 
மேன்மை வித்தகம் 
அட்ட கருமத்தை தொலைத்த அற்புதத்தை நிகழ்த்திடுமோ🪷


நித்திய காதலனாய் நிரந்தர விடை கொடுக்கும் ஒரு நாளில் உன் முன்னே நான் சென்று...


நீ இல்லா தனிமையை கொன்று தீர்ப்பேன் 
எனதாயுள் என்ற மேன்மையை இணைத்தும் நீ எனக்குமாய் வாழ வேண்டும்...


என் இனிய காதலே
 என் பின்னும் நீ வாழ்க பல்லாண்டு
 🪷🪷🙏🙏

#மாதங்கியான்

No comments:

Post a Comment